Posts

Showing posts from July, 2017

நிலவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுலா செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு: விண்வெளி ஓடத்தில் நிலாவில் உலா வர திட்டம்

Image
கலிபோர்னியா: விண்வெளி ஆய்வில் தொடர்பில்லாத சாதாரண சுற்றுலா பயணிகளை நிலவுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகானம் ஹாதோர்ன் நகரில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி சுற்றுலா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலவுக்கு சுற்றுலா செல்ல 2 பேரை தேர்வு செய்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அவர்கள் யார் அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை தெரிவிக்கப்படாதது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாசாவின் வழிகாட்டுதலுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திலிருந்து சுற்றுலா ராக்கெட் ஏவப்பட்டு விண்வெளியை அடையும். பின்னர் அதிலிருந்து பிரிந்து நிலவுக்கு செல்லும் விண்வெளி ஓடத்தில் இருந்தபடியே சுற்றி பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் உள்ள நிலவு சுற்றுலா திட்டம் அடுத்த ஆண்டின் இறுதியில் தான் செயல்படுத்தப்படும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு

Image
வாஷிங்டன்: பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா கண்டறிந்துள்ளது. இந்த கிரகங்களில் பூமியை போலவே தட்பவெப்ப நிலையும், பூமியின் அளவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 219 கிரகங்களை உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில் நாசா விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர். நாசாவின் கெப்ளர் வான்வெளி தொலைநோக்கி மூலம் நடைபெற்று வந்த ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளன. 2009-ம் ஆண்டில் கெப்ளர் ஆய்வினைத் துவங்கி பிரபஞ்சத்தில் பூமி மட்டும் தனித்துள்ளதா இல்லை அது போன்ற கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி துவங்கப்பட்டது.  விஞ்ஞானிகள் இதுவரை 4,034 கிரகங்களை கண்டறிந்துள்ளனர். இதில் பூமி போன்றே உருவத்திலும், தட்பவெப்ப நிலையில் சுமார் 50 கிரகங்களை வரை இருப்பதாக தெரிகிறது. அதில் 10 கிரகங்கள் பூமியை போலவே சூரியனை சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை போல தட்பவெட்ப நிலையும், தண்ணீருக்கான சாத்தியக்கூறுகளும் இந்த கிரகங்களில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், மற்ற தொலைநோக்கி மூலம் மேற்கொண்ட ஆரய்ச்சியில் நமது சூரிய குடும்பத்தினையும் கடந்து அமைந்துள்ள விண்மீன் கூட்டங்களில் ச

TNUSRB Police Constable Result 2017

Image
TNUSRB Police Constable Result 2017 Declared: Check Tamil Nadu TN Police Roll number wise Result and Cut off at tnusrbonline.in and tn.gov.in   July 7, 2017: The Tamil Nadu Uniformed Services Recruitment Board 2017 has declared the result of TNUSRB Police Constable Exam 2017. The result of Common Recruitment Exam 2017 for Grade II Police Constable, Grade II Jail Warders and Fireman Exam has been released on the official website tnusrbonline.in, tnusrbonline.org and tn.gov.in. The exam was conducted on May 21, 2017. The roll numbers of candidates selected for for next stage of recruitment i.e. PMT-ET-PET, Physical Measurement Test, Endurance Test and Physical Efficiency Test, by applying 1:5 ratio and various reservations as per the rules have been displayed on the official website. The cut-off marks have also been released on the official portal. Candidates can check their roll number wise result and cut off now. The direct link for TNUSRB Police Constable Resul

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

Image
 சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை தமிழகத்து வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம் ஆகும். இக்காலத்தில் தமிழரின் நாகரிகம் முழு வளர்ச்சியுற்றிருந்தது. மூன்று பேரரசுகள் சங்க காலத்தில் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இம்மூன்று பேரரசுகளை ஆண்ட மன்னர்கள் தங்கள் நாட்டிற்கு நன்மையைச் செய்து மேன்மையடையச் செய்தனர். ஒவ்வோர் மன்னர்க்கும் இடையே ஆதிக்கப்போட்டி நடைபெற்று வந்தாலும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். இச்சங்க காலத்தின் அரசியலில் மக்களின் பங்கும் அவசியமாகிறது. எனவே அக்கால மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிறது. சங்க காலத்தில் நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே மக்களும் தங்களது வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். குறிப்பாகக் காடும் காட்டைச் சார்ந்த இடத்தை முல்லை என்றும், மலையும், மலையைச் சார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும் பிரித்து அவ்வந்நிலத்தை ஒட்டியே வாழ்ந்து வந்தனர். இவ

சங்க காலம் வரலாறு

Image
சங்க காலம்   "வரலாற்றின் உயிர்நாடி, காலக் கணிப்பாகும். இன்ன ஆண்டில், இன்ன திங்களில், இன்ன நாளில் இன்னது நிகழ்ந்தது என்று கூறுதல் வரலாற்றின் இலக்கணமாகும். பண்டையத் தமிழக வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்குக் காலங்கணித்தல் எளிதாகத் தோன்றவில்லை. மன்னர்களைத் தம் பாடல்களில் குறிப்பிடும் பழந்தமிழ்ப் புலவர்கள் அம்மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தைத் தெரிவிப்பதில்லை. அவர்களுடைய செய்யுள்களில் விளக்கப்படும் சில நிகழ்ச்சிகளைக் காலங்கணிக்கப்பட்ட வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்புறுத்தி அவற்றில் காலத்தை ஒருவாறு அறுதியிட வேண்டியதுள்ளது" என வரலாற்றுப்    பேராசிரியர்   கே.கே.பிள்ளை குறிப்பிடுகின்றார்.    எனவே,    புறச்சான்றுகளைவிட, அகச்சான்றுகளையே அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுக்க வேண்டியுள்ளது. அகச்சான்றுகள் பெரும்பாலும் இலக்கியங்களாகவே உள்ளன.  அவ்விலக்கியங்கள் தரும் சான்றுகளிலிருந்து தமிழகத்தின் வரலாற்றுக்கு உட்பட்ட காலம் சங்ககாலம் என்பது பெறப்படுகிறது. இக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் பாண்டியன், சோழன், சேரன் என்ற முப்பெரும் மன்னர் அரசாண்டு வந்தன