Posts

வேதியியல் பெயர்கள்

Image
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் சிலவற்றின் வேதியியல் பெயர்கள்: நீர்த்த சுண்ணாம்பு  – Calcium Hydroxide பிளீச்சிங் பவுடர்      – Calcium Oxychloride காஸ்டிக் சோடா      –  Sodium Hydroxide கல் உப்பு                       –  Sodium Chloride எப்சம்                            – Magnesium Sulphate ஜிப்சம்                           – Calcium Sulphate வினிகர்                         – Acetic Acid பேக்கிங் பவுடர்         – Sodium Bicarbonate வாஷிங் சோடா        – Sodium Carbonate வெள்ளை சர்க்கரை- Sucrose

நானோ டெக்னாலஜியில் புதிய டிஸ்க்

Image
ப்ளூ ரே யை விட2,800 மடங்கு அதிக ஆயுட்காலம் கொண்ட நானோ டெக்னாலஜியில் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்ட ஒரு படிகத்தை  ( crystal of nano structured glass)  பிரிட்டனில் ஒரு ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.  இதன் ஆயுட்காலம் மனித குலம் அழிந்து வேறு கிரகவாசிகள் வரும் வரை இருக்குமாம். (DVD ன் ஆயுட்காலம் ஏழுவருடங்கள் தானாம்). புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சேமிப்பு சாதனம் (storage device) ஒரு டிவிடி அளவிலான வட்டு 360 டெராபைட்டுகள் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும். சமீபத்திய கண்டுபிடிப்பான  நான்கடுக்கு ப்ளூ ரே டிவிடி அதிகபட்ச கொள்ளளவு 128 ஜிகாபைட் மட்டுமேஉள்ளது.

இந்தியாவில் உங்களுக்கு தெரியாத பேய்கள் நடமாடும் 5 இடங்கள்

Image
இந்தியாவில் உங்களுக்கு தெரியாத பேய்கள் நடமாடும் 5 இடங்கள் நாங்கள் ராஜஸ்தானின் பாங்கர் கோட்டையிலிருந்து எமது பட்டியலை தொடங்கினோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு . இந்தியா புதிர் நிலங்களை கொண்டுள்ள நாடு , விடைகள் இல்லா பல  கேள்விகள் கொண்டது . பேய்கள் நடமாடும் இடங்கள் பற்றி உண்மையான கதைகள் கேட்டு வளர்ந்துள்ளோம் மற்றும் இன்னும் சில பாங்கர் கோட்டை போல பிரபலமானது ஆனால் இங்கு இந்தியாவின்  சில பேய்கள் நடமாடும் இடங்களை பட்டியலிட்டுள்ளோம் அங்கு அமானுட நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்வீர்கள் . இந்த இடங்கள் உங்களை சுற்றி இருக்கலாம் . பாருங்கள் 1. தேசிய நூலகம் கொல்கத்தா பேய்கள் மற்றும் ஆவிகள் பாழடைந்த கட்டிடங்களில் வாழும் என்று நீங்கள் நினைத்தால் , அது தவறு . கொல்கத்தாவில் தேசிய நூலகத்தில் இயற்கைக்கு புறம்பான நிகழ்வுகள் பல உள்ளன அங்குள்ள  காவலர்கள் இரவில் பணிபுரிய சந்தேகிக்கிறார்கள் , அவர்கள் அதை பற்றி ஊடகங்களில் கூட வாய் திறப்பதில்லை . நூலகம் கட்டி இறந்த தொழிலாளர்களின் பேய்கள் அங்கு காணப்பட்டது . நீண்ட காலம்  முன்னர் , தனது ஆராய்ச்சி செய்ய நூலகம் உள்ளே செ...

முதுமக்கள் தாழி - முடிச்சு அவிழும் மர்மங்கள்

Image
அந்த காலத்துல யாரும் வயசான பின்னாடியும் யாரும் சீக்கிரம் சாவமாட்டாங்களாம் அதுக்காக என்ன பண்ணுவாங்களாம் சாகாத கிழவங்களை, கிழவிகளை சம்மணம் போட்டு உட்கார வச்சு அவங்க அளவுக்கு ஒரு பானை செஞ்சு உசிரோட பொதச்சிருவாங்களாம்..... என தெற்கத்திப்பக்கம் ஒரு நாட்டுப்புற கதை மக்களிடையே நிலவி வருகிறது. பாட்டியிலிருந்து, பேரர்களுக்கு இக்கதை சென்ற நூற்றாண்டு வரை சொல்லப்பட்டு வந்தது. நம் பாட்டிமார்கள் காலம் காலமாக செவிவழிச் செய்திகளாக கூறும் நாட்டுப்புற கதைகளில் முதுமக்கள் தாழி குறித்த கதைப்புனைவு நிறையவே இருக்கிறது. மூத்தோர் வணக்கம் தமிழர்கள் போற்றிய ஒரு வழக்கமாகும். பேரளவு தெய்வங்கள் எல்லாம் எட்டிப்பார்க்காத சங்க கால சமய வரலாற்றில் மூத்தோர் வணக்கம் தெய்வ வழிபாடாக சிறப்பிக்கப்பட்டாலும் சில வினோத பழக்கங்களும் சங்க கால மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. அவற்றில் ஒன்றுதான் முதுமக்கள் தாழி என்னும் சவ அடக்க முறையாகும். ‘தாழியுடன் கவிப்போர்’ என மணிமேகலை இவ்வழக்கம் குறித்துச் சுட்டுகிறது. சோழன் கிள்ளி வளவன் இறந்துவிட அவன் புகழைப்பாடும் ஐயூர் முடவனார் பானைகள் செய்யும் குயவரை விளித்துப்பாடும் பாடல் ‘கலஞ்செ...

பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!!

Image
பல்லாங்குழி விளையாட்டு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளிலும் இந்தோநேசியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளிளும் பரவலாக விளையாடப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் தூய தமிழ்ச் சொற்கள் அல்லது சில சம்ஸ்க்ருத சொற்களுடன் ஆடப்படும் இந்த ஆட்டம் எங்கே தோன்றியது என்று ஆராய்ந்தேன். தமிழ்நாட்டில்தான் இது பெரும்பாலும் தோன்றியிருக்க வேண்டும் பின்னர் தமிழர்கள் வணிகத்துக்காக சென்ற இடங்கள் எல்லாம் இதை எடுத்துச் சென்று பரப்பியிருக்கலாம். இவ்வாறு நம்புவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 1.நாம் இந்தோநேசியா, வியட்நாம், மலேசியா முதலிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தோம். பல்லவ கிரந்தம் என்னும் வட்டெழுத்துதான் தென்கிழக்காசிய நாடுகளின் எழுத்து வடிவங்களுக்கு மூலம். இதை ஆகிய கட்டுரைகளில் ஏற்கனவே விளக்கிவிட்டேன். 2.இரண்டாவது காரணம் காசி, பசு, மூன்று விரை(விதை) ஆட்டம், ஆறு விரை ஆட்டம், சீதா பாண்டி, ராஜா பாண்டி, காசி பாண்டி முதலிய சொற்கள் அனைத்தும் தமிழ் அல்லது வடமொழிச் சொற்கள் ஆகும் 3. சீதை அசோகவனத்தில் ஆடிய ஆட்டம் என்பதே சீதாப் பாண்டி என்று மக்கள் நம்புவதாக...

பாதாள அறையை திறந்தால் கல்லாகி போவர் தில்லாபுரி கோயில் திக்..திக்..

Image
கேரள தலைநகர் திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயிலின் பாதாள அறைகளில் இருந்து குவியல்குவியலாய் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்நியர் படையெடுப்புகளின்போது பெருஞ்செல்வத்தை காப்பாற்ற மன்னர்கள் கோயில் ரகசிய அறையில் அவற்றை மறைத்து வைத்து காத்துள்ளனர். திருவனந்தபுரம் கோயிலை அடுத்து தமிழக கோயில்களிலும் புதையல் இருக்கலாம் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.  சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நிர்மாணித்து வழிபட்ட பல கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. அவை வழிபடுவதற்காக மட்டுமின்றி, இயற்கை அழிவு, எதிரிகளின் தாக்குதல் போன்றவற்றில் இருந்து மக்களையும், செல்வங்களையும் காப்பாற்ற திட்டமிட்டு கட்டப்பட்டவை. இந்த கோயில்களில் நீங்காத மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. கோயில் பொக்கிஷங்களை பூதங்கள் காவல் காக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளதால், இன்னும் அவை வெளிச்சத்துக்கு வராமலே உள்ளன.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் முந்தைய காலத்தில் கொங்குநாட்டின் தலைநகராக இருந்தது. இங்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். கங்க வம்சத்தை சேர்ந்த மன்னர்கள், சோழ மன்னர்கள் விக்ரமன், வீரராஜேந்திரன், குலோத...

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் புதையலா: ரகசிய அறை மர்மம்?

Image
  திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள இரண்டு ரகசிய அறைகளில் புதையல் இருப்பதாகவும், அதை திறந்து பார்க்க வேண்டும் என்றும் பல ஆண்டாகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பக்தர்கள் கூறி வருகின்றனர். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. சைவ சமயத்தின் தலைமை இடமாகவும், பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆழி தேர் என்று அழைக்கப்படும் இந்த தேர் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தேர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. அந்தத்  தேர் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. அதற்கு மக்கள் வெள்ளமென திரண்டு  தேரை வடம் பிடித்து இழுத்தனர். வருகிற 8-ம் தேதி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்காக யாகசால பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் நடப்பதற்குள் கோயிலில் உள்ள இரண்டு ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அதில் விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் அரிய வகை பொக்கிஷங்கள் இருக்கின்றன என்றும் பக்தர்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கல்வெட்டு...